வெள்ளி, 29 ஏப்ரல், 2016

பாரதிதாசனின் 126-வது பிறந்தநாள்!


புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் 

126-வது பிறந்தநாள்!


பாரதிதாசன் (ஏப்ரல் 291891 - ஏப்ரல் 211964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார்மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் போற்றப்படுகிறார்.

தமிழாசிரியராக 1909 - இல் பணியில் சேர்ந்தார்.  37 ஆண்டுகள் பணியாற்றினார்.
திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதி அதனால் கிடைத்த புகழைக் கொண்டு கவிஞராக ஆனவர் என்று பாரதிதாசனை இன்றைய தலைமுறையினர் தவறாகப் புரிந்த கொள்ளக்கூடாது.  இருபதுக்கும் அதிகமான படங்களுக்குப் பாடல்கள் எழுதிக்கொடுத்தார்.  ஏற்கனவே தான் கவிதையாக எழுதிய பாடல்களுக்கு இசை வடிவம் தரவும் இசைந்தார். 

தமிழ்


பாடல்: தமிழுக்கும் அமுதென்று பேர்
திரைப்படம்: பஞ்சவர்ணக் கிளி
பாடியவர்: பி.சுசிலா
இசை: எம்.எஸ். விஸ்வநாதன் – டி.கே. ராமமுர்த்தி
பாடல் இயற்றியவர்: பாரதிதாசன்
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்!
இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
சுடர்தந்த தேன்
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
வயிரத் தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்


பாடலைக் கேட்க ‘கிளிக்’ செய்க!


*****************************************


உழைக்கும் தோழர்களுக்காக...!


நீங்களே சொல்லுங்கள்

 "நீங்களே சொல்லுங்கள்" என்ற தலைப்பில் பாரதிதாசனால் இயற்றப்பட்ட பாடல், ஊதா வண்ணத்தில் உள்ள வரிகள் திரையிசைப் பாடலில் இடம்பெற்றன......


சித்திரச் சோலைகளே! உமை நன்கு
திருத்த இப்பாரினிலே -- முன்னர்
எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ!  உங்கள் வேரினிலே....


நித்தம் திருத்திய நேர்மையினால்மிகு
நெல்விளை நன்னிலமே! -- உனக்கு
எத்தனை மாந்தர்கள் நெற்றி வியர்வை
இறைத்தனர் காண்கிலமே. 
தாமரை பூத்த தடாகங்களே! உமைத்
தந்த அக் காலத்திலே -- எங்கள்
தூய்மைச் சகோதரர் தூர்ந்து மறைந்ததைச்
சொல்லவோ ஞாலத்திலே.


மாமிகு பாதைகளே! உமை இப்பெரு
வையமெ லாம்வகுத்தார் -- அவர்
ஆமை எனப்புலன் ஐந்தும் ஒடுங்கிட
அந்தியெலாம் உழைத்தார்.
ஆர்த்திடும் யந்திரக் கூட்டங்களே! -- உங்கள்
ஆதி அந்தம் சொல்லவோ? -- நீங்கள்
ஊர்த்தொழிலாளர் உழைத்த உழைப்பில்
உதித்ததுமெய் அல்லவோ?


கீர்த்திகொள் போகப் பொருட்புவியே! உன்றன்
கீழிருக்கும் கடைக்கால் -- எங்கள்
சீர்த்தொழிலாளர் உழைத்த உடம்பில்
சிதைந்த நரம்புகள் தோல்!

நீர்கனல் நல்ல நிலம்வெளி காற்றென
நின்ற இயற்கைகளே! -- உம்மைச்
சாரும் புவிப்பொருள் தந்ததெவை? தொழி
லாளர் தடக்கைகளே!
தாரணியே! தொழிலாளர் உழைப்புக்குச்
சாட்சியும் நீயன்றோ? -- பசி
தீரும் என்றால் உயிர்போகும் எனச்சொல்லும்
செல்வர்கள் நீதி நன்றோ?


எலிகள் புசிக்க எலாம் கொடுத்தே சிங்க
ஏறுகள் ஏங்கிடுமோ -- இனிப்
புலிகள் நரிக்குப் புசிப்பளித்தே பெரும்
புதரினில் தூங்கிடுமோ?

கிலியை விடுத்துக் கிளர்ந்தெழுவார் இனிக்
கெஞ்சும்உத் தேசமில்லை -- சொந்த
வலிவுடையார் இன்ப வாழ்வுடையார் இந்த
வார்த்தைக்கு மோசமில்லை.

பாடலைக் கேட்க ‘கிளிக்’ செய்க!




*****************************************

இல்லறம் இனிமையாக ...!

பாரதிதாசன் ஏற்கனவே இயற்றியிருந்த  ‘துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ’ என்ற இந்தப் பாடலை   ‘ஓர் இரவு’ படத்தில்  இடம்பெறச் செய்தால் மிகப் பொருத்தமாக இருக்கும் என்று அண்ணாத்துரை பரிந்துரைக்க ‘ஓர் இரவு’ படத்தில் பயன்படுத்திக் கொள்ள அனுமதி பெற்று ஆயிரம் ரூபாய் பணத்தைப் பாரதிதாசனிடம் ஊதியமாகக் கொடுத்தார்  ஏ.வி.எம். மெய்யப்பச் செட்டியார்.  



துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்கமாட் டாயா? -- எமக்
கின்பம் சேர்க்கமாட் டாயா? -- நல்
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடிநீ
அல்லல் நீக்கமாட் டாயா? -- கண்ணே
அல்லல் நீக்கமாட் டாயா? துன்பம்...

வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வில் உணர்வு சேர்க்க -- எம்
வாழ்வில் உணர்வு சேர்க்க -- நீ
அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்டமாட் டாயா? -- கண்ணே
ஆடிக் காட்டமாட் டாயா? துன்பம்...

அறமி தென்றும்யாம் மறமி தென்றுமே
அறிகி லாத போது -- யாம்
அறிகி லாத போது -- தமிழ்
இறைவ னாரின் திருக்குறளிலே ஒருசொல்
இயம்பிக் காட்டமாட் டாயா? -- நீ
இயம்பிக் காட்டமாட் டாயா? துன்பம்...

புறம் இதென்றும் நல்லகம் இதென்றுமே
புலவர் கண்ட நூலின் -- தமிழ்ப்
புலவர் கண்ட நூலின் -- நல்
திறமை காட்டி உனை ஈன்ற எம் உயிர்ச்
செல்வம் ஆகமாட் டாயா? -- தமிழ்ச்
செல்வம் ஆகமாட் டாயா? துன்பம்...
பாடலைக் கேட்க ‘கிளிக்’ செய்க!
                                                                              

******************************************


தமிழனின் வாழ்வு!






சங்கே முழங்கு சங்கே முழங்கு

திரைப்படம்: கலங்கரை விளக்கம்
இயற்றியவர்: பாவேந்தர் பாரதிதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன், பி. சுசீலா
ஆண்டு: 1965


சங்கே முழங்கு சங்கே முழங்கு
சங்கே முழங்கு சங்கே முழங்கு

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
ஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு

சங்கே முழங்கு சங்கே முழங்கு சங்கே முழங்கு

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்
தமிழுடன் பிறந்தோம் நாங்கள்
ஆண்மை சிங்கத்தின் கூட்டமென்றும்
சிறியோர்க்கு ஞாபகம் செய் முழங்கு சங்கே

சங்கே முழங்கு ஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோள் எங்கள்
வெற்றித் தோள்கள் ஆஆஆஆஆஆஆஆஆஆ
கங்கையைப் போல் காவிரி போல்
கருத்துக்கள் ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம்
வெங்குருதி தனில்கமழ்ந்து வீரஞ்செய்கின்ற
தமிழ் எங்கள் மூச்சாம் தமிழ் எங்கள் மூச்சாம்


பாடலைக் கேட்க ‘கிளிக்’ செய்க!

*****************************************


‘வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா’ 
பாரதிதாசனின் புரட்சிப் பாடல் 2006-இல் விஷால் நடிப்பில் வித்யாசாகர் இசையில் ‘சிவப்பதிகாரம்’  
படத்தில் இடம்பெற்றது.

பாடலைக் கேட்க ‘கிளிக்’ செய்க!


*****************************************
மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.

வியாழன், 14 ஏப்ரல், 2016

நீங்க நினைக்காத நெஞ்சம்! (16)


நீங்க நினைக்காத நெஞ்சம்! (16)


ரோஸி மனம் தக்கை போல லேசாக இருப்பதாக உணர்ந்தாள்.




   தமிழினியனிடம் அவனின் அம்மா எழுந்தவுடன் சாப்பாடு கொடுக்கச் சொல்லிவிட்டு வேலைக்குப் புறப்பட்டுச் சென்றாள். 
                        
வெளியில் சென்ற சிறிது நேரத்திலேயே அரக்கப்பரக்க வேகமாக வீட்டிற்குள்  கையில் செய்தித்தாளுடன் வேகமாக வந்தாள்.

“என்னாச்சு... ஏன் பதட்டம்...?தமிழினியனும் பதட்டத்துடன் கேட்டான்.

“டீக்கடையில வால் போஸ்டர பார்த்தேன்... ‘ஸ்ரீரங்கம் கல்யாண மண்டபத்தில் தீ  29 பேர் உடல்கருகிச் சாவுங்கிறத பார்த்து... பேப்பர வாங்கி பார்த்தேன்.   மாப்பிள்ளையும் செத்துப் போயிட்டாருன்னு செய்தியை படிச்சிட்டு ஓடி வர்றேன்...!” - என்று அந்தப் பேப்பரை ரோஸி வேகமாக நீட்டினாள்.

தமிழினியன் அந்தச் செய்த்தாளை வாங்கிப் படித்தான்.  திருமண மண்டபத்தில் சசிரேகாவின் கல்யாணத்தில் நடந்த அந்த விபத்து பற்றி படங்களுடன் இருந்த செய்தியைப் பார்த்தவுடனே மயங்கிச் சரிந்தான்.

ரோஸி வேகமாகத் தண்ணீரைத் முகத்தில் தெளித்து மயக்கம் போக்கினாள்.

தமிழினியன் மீண்டும் செய்தித்தாளைப் படித்தான்;  தலையில் அடித்துக் கொண்டு அழுதான்.  ரோஸி அவனைத் தேற்றினாள்.

“கெளம்புங்க... நாம சசியோட வீட்டுக்குப் போகலாம்...”  ரோஸி அழைத்தவுடன் தமிழினியன் எழுந்தான்.  தமிழினியன் அம்மாவை எழுப்பி தாங்கள் அவசரமாக வெளியே செல்வதால் சாப்பாட்டை எடுத்துப் போட்டு சாப்பிடச் சொல்லிவிட்டு இருவரும் புறப்பட்டனர்.

இதைக் கேட்டு கண்விழித்த தங்கம்மாளுக்கு ஒன்றும் புரியாமல் அவர்கள் செல்வதையே பார்த்துக் கொண்டு இருந்தாள்..   திருமண விசயமாக முடிவெடுத்து அதை என்னிடம் சொல்லாமல் இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் என்று செல்கிறார்கள் போல என்று தங்கம்மாள் மனதில் நினைத்துக் கொண்டு சந்தோசப்பட்டாள்.

நகரப் பேருந்து வரும்வரை காத்திருந்து, அது வந்தவுடன் அதில் ஏறினர்.

‘சசி எப்படி இருக்கிறாளோ...?  ஏன் அவளின் வாழ்வில் இந்தக் கொடுமை...?இந்த அகோர விபத்தினால் அவளின் வாழ்க்கை சிக்கிச் சின்னாபின்னமாக ஆகிவிட்டதே...!’  தமிழினியனுக்கு நினைக்க நினைக்க அழுகை அழுகையாக வந்தது.  கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே வந்தான்.
            
பேருந்திலிருந்து இறங்கி ஓட்டமும் நடையுமாக சசியின் வீட்டை அடைந்தனர். 
 
வீட்டில் ஒரே மயான அமைதி;  சசிரேகாவின் அப்பா ரெங்கராஜ் சுவரில் சாய்ந்தபடி தரையில் உட்கார்ந்திருந்தார்.  இவர்கள் இருவரையும் பார்த்தார்.  ‘வாங்கஎன்றோ இல்லை ஏன் வந்தீர்கள்?எனறோ எதுவும் சொல்லாமல் இருந்தார்.

தமிழியனும் ரோஸியும் மெதுவாக  சசிரேகாவின் அறைக்குள் சென்றனர்.

சசிரேகா தலைமுடியெல்லாம் கலைந்து முகத்தை அது மூடிக்கொண்டு கிடக்க கட்டிலில் குத்திட்டு அமர்ந்திருந்தாள்.
                           
ரோஸி சசிரேகாவின் அருகில் போய் முகத்தை மூடி இருந்த முடியை விளக்கி எடுத்துப் பின்புறம் போட்டாள்.  சசிரேகா குனிந்த தலை நிமிராமல் இருந்தாள். 
                              
ரோஸி சசிரேகாவின் முகத்தைத் தன் கைகளால் உயர்த்திப் பிடித்தாள். 

“சசி... நா... தமிழ்... வந்திருக்கேன்...”  தமிழினியன் வார்த்தை வெளிவரத் தடுமாறி வந்து விழுந்தது.

சசிரேகா அவர்களைப் பார்த்தாள்.  அவளின் முகத்தில் எந்தச் சலனமும் இல்லைமீண்டும் தலையை அதேபோலத் தொங்கப் போட்டுக் கொண்டு விட்டாள்.

“சசி... நா... தமிழ்... வந்திருக்கேன்...” - தமிழினியன் சொல்வதைத் காதில் கேட்டுக் கொண்டவளாகத் தெரியவில்லை.  தமிழினியன் கேவிக் கேவி அழுதான்.

“நா ரோஸி... வந்திருக்கேன்... இங்க பாருங்க...”  என்று ரோஸி தலையை  நிமிர்த்திச் சொன்னாள்.

“எனக்குக் கல்யாணம்... எனக்குக் கல்யாணம்... எனக்குக் கல்யாணம்...சொன்ன இதையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தாள்.   அவர்களைப் பார்த்து ‘ஹி...ஹி...’வெனச் சிரித்தாள்.

வந்திருப்பது யாரென்‘று அவள் உணர்ந்த்தாகத் தெரியவில்லை.

“எனக்குக் கல்யாணம்... எனக்குக் கல்யாணம்... எனக்குக் கல்யாணம்...’ -என்று சொல்லிக் கொண்டே எழுந்தவள் டிரஸ்ஸிங் டேபிளைக் கீழே தள்ளிவிட,  அதிலிருந்த கண்ணாடி உடைந்து சுக்குநூறானது.
                                  
ரெங்கராஜ் சத்தம் கேட்டு அறைக்குள்ளே ஓடி வந்து திகைத்து நின்றார்.

“மண்டபத்தில நடந்த விபத்தப் பார்த்ததுல இருந்து... புத்தி சுவாதீனமில்லாம... பைத்தியம் பிடிச்சவமாதிரி நடந்துக்கிறா...?  பச்சத் தண்ணீகூட குடிக்கமாட்டேங்கிறா... எதுவும் இதுவரைக்கும் சாப்பிடல... எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல... இவளோட வாழ்க்கையக் கெடுத்த பாவியாயிட்டேன்...”  என்று சொல்லி ரெங்கராஜ் கதறிக் கதறி அழுதார்.

ரோஸி சமையலறைக்குள் சென்று வேலைக்காரப் பெண்ணிடம் சாப்பாட்டை வாங்கிக் கொண்டு வந்து சசிரேகாவின் அருகில் அமர்ந்தாள்.

தட்டிலில் இருந்த சாப்பாட்டை எடுத்து சசிரேகாவிற்கு தமிழினியன் ஊட்டிவிட,  பயங்கரப் பசியில் இருந்தவள் போல அதைச் சாப்பிட்டாள்.

“நீங்களும் சாப்பிடுங்க...!என்று சொல்லிக் கொண்டே தமிழினியனுக்கும் ரோஸிக்கும் சாப்பாட்டை எடுத்து சசிரேகா ஊட்டிவிட்டுக் கொண்டே...  
அவள் மெல்லச் சிரித்தாள்..  
....................
                                                                            

படிக்க  ‘கிளிக்’ செய்க 















                                                                                                

                                                
                                                         
                                                                                                                                                            







        



புதன், 6 ஏப்ரல், 2016

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (15)


நீங்க நினைக்காத நெஞ்சம்...! (15)




  இருட்டு இன்னும் விலகாத வைகறைப் பொழுது.       தமிழினியன் எப்போது தூங்கினான்;  எப்போது விழித்தான் என்றே தெரியவில்லை.  அவன் ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதை அறிந்து கொண்டு  ரோஸி கேட்டாள்.


என்ன... ஒரே சிந்தனை...?”  ரோஸி அருகில் நிற்பதை அப்பொழுதுதான் தமிழினியன் பார்த்தான்.

பதிலேதும் சொல்லாமல் அமைதியாக ரோஸியைப் பார்த்தான்.

என்ன தூக்கம் வரலையா...?” 

ஆமாம்என்பது போலத் தலையை அசைத்தான்.

எனக்குந்தான்...!ரோஸி சொன்னவுடனே தூக்கிவாரிப் போட்டதைப் போல எழுந்து உட்கார்ந்தான்.

என்ன சொல்றீங்க...?  அப்ப நீங்களும் தூங்கலையா...?”  ரோஸியைப் பார்த்து தமிழினியன் கேட்டான்.

ஆமாம்என்று தலையை ஆட்டினாள் ரோஸி.


“ஏன்...?” என்று  கேட்டு ரோஸியைப் பார்த்தான் தமிழினியன்;  அவளின் முகம் அந்த வேளையிலும் பளிச்செனத் தெரிந்தது.

நான் தூங்கலைங்கிறது எப்படித் தெரியும்...?”

அப்ப... நீங்களும் தூங்கலையான்னா...?  நீங்களும்... அந்த உம்க்கு என்ன அர்த்தமாம்...?  சொல்லிவிட்டுச் ரோஸி சிரித்தாள்.

சரி... சரி... ஏன் தூங்கல...?

நீங்க ஏன் தூங்கலையாம்...?”

அம்மா சொன்னத நினச்சு நினச்சு... எனக்குத் தூக்கம் வரலை...?”  தமிழினியனின் பெருமூச்சு ரோஸியைச் சுட்டது.

என்ன...?  முடிவு எடுத்தீங்க...?”

ஒரே குழப்பமா இருக்கு...!

குழம்பிய குட்டையில மீன் பிடிச்சாச்சா... இல்லையா...?”

“ ‘மயக்கமா கலக்கமா... மனதிலே குழப்பமா... ’இந்தப் பாட்டுதான்  என்னோட மனசில மாறி மாறி வருது...

ஏழை மனதை மாளிகை ஆக்கி... இரவும் பகலும் காவியம் பாட ஆரம்பிச்சுடுவீங்க போல இருக்கே... என்ன இருந்தாலும் கவிஞர்தானே...!

நான் கவிஞனும் இல்லை... நல்ல ரசிகனும் இல்லை... காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை... ஆனா அம்மா எதையும் என்னிட்ட இதுவரைக்கும் கேட்டதே இல்ல... எதையுமே எதிர்பாத்ததும் இல்லை...  அம்மாவோட  ஆசையை நெனச்சா...!

ஒங்க அம்மா ஆசை... பாவம்... அவுங்களுக்கு என்ன தெரியும்...?”

சரி... அத விடுங்க... அம்மா சொன்னதைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க...?” ரோஸியிடம் கேட்டான்.

நீங்க என்ன நினைக்கிறீங்க...?”

எனக்கு  குழப்பமா இருக்கு...!

எனக்கு எந்தக் குழப்பமும் இல்ல...!

அப்படின்னா...?”  

அப்படித்தான்...!

கொஞ்சம் புரியும்படி சொல்லுங்களேன்...!

மொதல்ல இந்த வாங்க... போங்கன்னு ரொம்ப மரியாதையா சொல்றத விடுங்க...

சரிங்க...

பாத்திங்களா... இன்னும்  உங்கள மாத்திக்கல...!

சரி... மாத்திக்கிறேன்... ம்...ம்... சொல்லுங்க...

நீங்கதான் சொல்லனும்...!

இருவரும் நீண்ட நேரம் மௌனமாக இருந்தனர்.  தமிழினியன்தான் மௌனம் கலைந்தான்.

அம்மாவுக்கு... நா சசியை காதலிக்கிறது தெரியாதில்ல...!

“ஆமாம்... நீங்க ஆசைப்பட்டது அம்மாவுக்குத் தெரியாதில்ல...!

இனி தெரிஞ்சுதான் என்ன ஆகப் போவுது...   எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் இதுதான் பாதை... இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது... பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடுமுன்னு...கண்ணதாசன் பாடிட்டு போயிட்டாரு...

மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடுமுன்னு அவரேதான் பாடியிருக்கிறாரு... இந்தக் கவிஞர பிடிச்சதுக்குக் காரணமே கவிதைதான்...!





             “என்னோட ஆசையும் என் அம்மாவோட ஆசையும் நிராசையா ஆயிடுச்சு...!”

ஒங்க அம்மா நிம்மதிக்காக...  நீங்க நிம்மதியில்லாம வாழமுடியுமா...?   யாருக்காகவும்... ஒங்கள நீங்க மாத்திக்காதிங்க... நீங்க நீங்களா இருங்க... அனாதையா இருந்த எனக்கு ஒங்களோட புனிதமான நட்பு கிடைச்சதே நா செஞ்ச புண்ணியம்...!  அது போதும் எனக்கு...!  அம்மாட்ட  நடந்ததச் சொல்லிப் புரிய வைப்போம்....

தமிழினியன் குழப்பத்திலிருந்து விடுபட்டவனாக புன்னகையுடன் ரோஸியைப் பார்த்து வணங்கினான்.  ரோஸியின் கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் தமிழினியனின் காலில் விழுந்தது;  கண்கள் குளமாயின. 

                                                                                                       வ(ள)ரும்...












Related Posts Plugin for WordPress, Blogger...