புதன், 25 நவம்பர், 2015

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (7)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (7)


   காரிருள் சூழப் பகலிலேயே வானம் இருண்டுகொண்டு கனமழைக்கான மேகச் சுவடுகளுடன் இருந்தது.  

     டாக்டர் ‘பயாப்ஸி’ எடுத்து டெஸ்ட்டுக்கு கொடுத்த ரிசல்ட் கையில் வைத்து அமைதியாக அதையே  பார்த்துக் கொண்டு இருந்தார்;  எதிரே அமர்ந்திருந்த தமிழினியனின்    இதயத்துடிப்பு அதிகரித்துக் கொண்டே போக அனைத்துக் கடவுளையும் வேண்டிக் கொண்டு   அமர்ந்திருந்தான்.

   “மிஸ்டர்...................” - டாக்டர் அவனின் பெயரை  யோசித்தார்.

   “தமிழினியன்...டாக்டர்”

   “ஓ...எஸ்... மிஸ்டர்  தமிழினியன்... நெறையாப் பேரப் பார்க்கிறதால பேர மறந்திட்டேன்... சாரி...”

   “பரவாயில்லைங்க டாக்டர்...எத்தன பேர் வர்றாங்க... போறாங்க... எல்லாருடைய பேரும் ஞாபகம் வச்சுக்க முடியாதில்ல...!”

   “சரியாச் சொன்னீங்க... மிஸ்டர் தமிழினியன்... சரி...நா விஷயத்துக்கு வர்றேன்... நா சந்தேகப்பட்ட மாதரியே ஒங்க அம்மாவுக்கு லங்ஸில்ல கேன்சர்ன்னு  கன்பார்ம் ஆயிடுச்சு”  தமிழினியனின் விழிகளிலிருந்து நீர் வழிந்தது.  அவனால் பேச முடியவில்லை;  வேண்டிய தெய்வங்கள் எல்லாம் கைவிட்டதாக மனதுக்குள் நினைத்துக் கொண்டு வழிந்த கண்ணீரைத் துடைத்தான்.

   “டாக்டர்... எங்க அம்மாவ எப்படியாவது காப்பாத்துங்க... எனக்கின்னு வேறு யாருமில்ல...பிளிஸ்”  கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டான்.

   “மிஸ்டர் தமிழினியன்... கேன்சர்ன்னா... எல்லாமே ஆளக் கொன்னுடுமுன்னு நெனக்க வேண்டியதில்ல... ஒங்க  அம்மாவுக்குப்  புற்றுநோய் இருப்பதைத் தொடக்கத்திலேயே கண்டிபிடிச்சாச்சு...  இது பர்ஸ்ட் ஸ்டேஸ்தான்... நோ பிராபளம்... பயப்பட வேண்டியதில்ல... குணப்படுத்த முடியாதுன்னு முன்பு கருதப்பட்ட புற்றுநோயத் தற்போது குணப்படுத்த வழி உருவாகி இருக்கு... பயப்பட வேண்டியதில்ல...மருந்து மாத்திரை நான் தாறேன்... சீக்கிரம் குணமாக்கிடலாம்... டோன்ட் ஒர்ரி...  ‘தெரபி’ கொடுக்க அவசியம் இருக்காது... தேவை ஏற்பட்டா...  பிறகு பார்த்துக்கலாம்.

   “டாக்டர்... ஒங்களத்தான் நா தெய்வமா நம்பி இருக்கேன்... கைவிட்டுடாதிங்க...”  டாக்டரின் காலைப்பிடித்துக் கெஞ்சினான்.”

   “என்ன இது...?  எழுந்திரு... கவலப்படாதே... நா இருக்கேன்... கவலப்படாதே... மாத்திரை எழுதித் தாரேன்... வீட்டுக்குக் கூட்டிட்டுப்  போ...!”

   ‘வீட்டுக்கா...?’   வீடு இருந்தால்தானே... மனதுக்குள் நினைத்துக் கொண்டே மாத்திரைச் சீட்டை வாங்கிக் கொண்டு,   மாத்திரையை வாங்கினான்.  
   கருத்திருந்த மேகங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு இடியுடன் மழையைப் பெய்து வானமும் அழத்தொடங்கியது.

   தமிழினியன் அம்மாவிடம் சிரித்துக் கொண்டே வந்தான்.  

   “என்னப்பா... ராசா... டாக்டர் என்ன சொன்னாரு...?” தங்கம்மாள் கேட்டாள்.

   “ஒன்னுமில்லையாம்மா... சும்மா சின்ன நீர்க்கட்டியாம்... பயப்பட ஒன்னுமில்லட்டாரு...”

   “அப்ப... நம்ம... வீட்டுக்குப்  போலாமாப்பா...?”

   “போலாம்மா...” என்ன சொல்வது  என்று யோசித்துக் கொண்டிருந்த போது   மழையில் நனைந்திருந்த  ரோஸி  இவர்களின் அருகில் வந்து நின்றாள்.  ரோஸியை சற்றும் எதிர்பார்க்காத அவனுக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.

   “வாங்க... ரோஸி... அம்மா... இவுங்க எனக்குத் தெரிஞ்சவுங்கம்மா...எங்கம்மா”  அறிமுகப் படுத்தினான் தமிழினியன்.

   “வாம்மா... மகாலட்சுமி மாதரி இருக்கே.... அய்யோ ஒடம்பெல்லாம் நனைஞ்சு போயிருக்கே... இங்க வாம்மா...வா...”  அருகில் அழைத்து தன் முந்தானையால் ரோஸியின் தலையின் ஈரத்தைத் துவட்டி விட்டு அவளின் முகத்தைத் துடைத்து விட்டாள். 

   “என்ன இங்க வந்திருக்கீங்க...”  ரோஸியப் பார்த்துக் கேட்டான் தமிழினியன்.

   “ஒங்க வீடு தீயில எரிஞ்சு போனதப்  பேப்பர்ல பார்த்தேன்...”

   “அய்யய்யோ...  நம்ப வீடு தீயில எரிஞ்சிடுச்சா.... என்னப்பா...?” பயத்துடன் நடுங்கியபடித்  தங்கம்மாள் கேட்டாள்.

   “ஆமாம்மா... நம்ம ஆஸ்பத்திரிக்கு வந்தோமில்ல அன்னக்கி ராத்திரி...”

    “அய்யய்யோ... அம்மாவுக்குத் தெரியாதா... ?  

   “நா சொல்லல...பரவாயில்ல... எப்ப இருந்தாலும் தெரிஞ்சுதானே ஆகனும் ”

   “ஆபிஸ்ல வேலை... உடனே என்னால வர முடியல... இன்னக்கி  சண்டே ... அதான்”

   ”என்னப்பா சண்டே...” தங்கம்மாள் பதறிக் கேட்டாள்.

   “அய்யோ... இன்னக்கி ஞாயிற்றுக் கிழமைன்னு சொல்றாங்க...!”

   “அதானே... சண்டேயோ என்னமோன்னு நா  பயந்தே போயிட்டேன்...”

   “ஒங்க வீட்ட விசாரிச்சு அங்க போனதுக்கு அப்புறம்தான்... நீங்க ஆஸ்பத்திரியில இருக்கிற விவரம்  தெரிஞ்சது...  அதான் நேரா இங்க வந்தேன்....”

   “அம்மாவுக்கு என்னாச்சு...?”

   ”ஒன்னுமில்ல... வயித்துவலி... மாத்திரை கொடுத்திருக்காரு... வீட்டுக்குப் போகச் சொல்லிட்டாரு...”  தமிழினியின் சொன்னான்.

   “சரி... கௌம்புங்க... எ வீட்டுக்குப்  போகலாம்...!  நா தனியாத்தானே இருக்கேன்... வாங்க போகலாம்...!   வாங்கம்மா... ! ” தங்கமாளை அழைத்துக் கொண்டு தமிழினியனிடன் சம்மத்தைக்  கேட்டாமலே புறப்பட்டாள்.  தமிழினியனும் வேறுவழியின்றிப்  பின் தொடர்ந்தான்.

                                                                                                                      - வ(ள)ரும்...

படிக்க  ‘கிளிக்’ செய்க

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (1)

வெள்ளி, 20 நவம்பர், 2015

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (6)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (6)



   சிரேகாவின் அறையின் கதவைத் தட்டினாள் வேலைக்காரி அலமேலு.  கதவு திறக்கப்படவில்லை.  மீண்டும் வேகமாகத் தட்டினாள்.  சிறிது நேரத்தில் சசிரேகா கதவைத் திறந்துவிட்டு,  உடனே கட்டிலில் போய் படுத்துக் கொண்டாள்.

   “அம்மா... டீ...ம்மா...” என்று சொல்லி அருகில் வைத்துவிட்டுச் சென்றாள்.
 சசிரேகாவிற்கு நினைவு தெரிந்ததிலிருந்தே வேலைககாரியாக 
 அலமேலு வேலைக்குச் சேர்ந்தவள்; தனிமரமான  இவள், இன்று அம்பது வயதைத் தாண்டியும் குடும்பத்தில் ஒருத்தி போலவே வீட்டிலேயே இருந்து, வேலைகளைச்  செய்து காலத்தைக் கழிக்கிறாள்.

   ரெங்கராஜ் மருத்துவ விடுப்பு   போட்டுவிட்டு  வீட்டிலேயே இருந்தார்.  சசிரேகாவைக் கல்லூரி செல்ல அனுமதிக்காமல் வீட்டுக்காவலில் வைத்து, வேலைக்காரி அலமேலு அம்மாளிடம்  மகளைப் பொறுப்பாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

சனி, 14 நவம்பர், 2015

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (5)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (5)

                             


    மிழினியன்  பேருந்தைப் பிடித்து வீட்டிற்குப் பயணப்பட்டாலும்;  அவனுக்கு மனசு மட்டும் சசிரேகாவைச் சுற்றியே சுழன்றது.  அவளின் தந்தையிடம் மாட்டிக்கொண்டு என்ன பாடு பட்டாளோ?  என்ற எண்ணம் மட்டும் மாறிமாறி மனதுக்குள் வந்து வட்டமிட்டுக் கொண்டே  இருந்தது.

   வீட்டிற்குள் நுழைந்த தமிழினியன், ‘அய்யோ...அம்மா... வலி தாங்க முடியலையே...அய்யோ எனத் தனியாகக் கத்திக்கொண்டிருந்த தங்கம்மாளின் குரல் கேட்டு  ஓடினான்.

   அம்மா... என்னம்மா...?  என்னாச்சு...?” தமிழினியன் பதட்டத்துடன் கேட்டான்.

   ரெண்டு மூணு நாளாவே... சரியாச் சாப்பிட முடியலப்பா...ஒன்னிட்ட சொன்னா சங்கடப்படுவேன்னு சொல்ல... இன்னக்கிச் சுத்தமாச் சாப்பிட முடியலப்பா... வயித்து வலி என்னால தாங்க முடியலப்பா... முடியல...!

   என்னம்மா...எதா இருந்தாலும் என்னிட்டச் சொல்ல வேண்டியதுதானே...  சரி மொதல்லஆஸ்பத்திரிக்குப் போலாம்... பொறப்படுங்க...”- என்று சொன்னவுடன் தங்கம்மாள் தன் சுருக்குப் பையை எடுத்துக் கொடுத்தாள்.  அதில் ஆயிரத்து இருநூறு ரூபாய் இருந்ததைப் பார்த்தான்.

   நாம தர்மாஸ்பத்திரிக்குத்தான் போறோம்...” - என்று வாங்கிய சுருக்குப் பையைத் திருப்பிக் கொடுத்தான்.

   இருக்கட்டுப்பா... அத நீயே வச்சுக்க... பத்தலைன்னா... காதுல மூக்குல கிடக்கிறத... கழட்டியாவது என்ன காப்பாத்துப்பா...”  தங்கம்மாள் அவனின் முகத்தைத் தடவியபடி கையெடுத்துக் கும்பிட்டாள்.

   என்னம்மா...நீ... ஒனக்கு ஒன்னும் இல்ல... பேசாம இரு... பொறப்படு...

   அதுக்கு இல்லப்பா... நா சாகறதப் பத்திக் கவலைப் படுல... ஒனக்கு ஒரு கண்ணாலம் காட்சியப் பாத்திட்டு... கண்ண  மூடணும்... ஏன்னா என்ன விட்டா யாரிருக்காக... எ ராசாவுக்கு...நீ  அனாதையா அலையக்கூடாது பாரு...!
தங்கம்மாள் சொல்வதில் அவனுக்கு மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை. ஆமாம் அவளை விட்டால் அவனுக்கு யாரிருக்கிறார்கள்.


   காத்மா காந்தி அரசு மருத்துவமனையில் தங்கம்மாளை உள்நோயாளியாகத் தங்க வைக்க அம்பது ரூபாயை மருத்துவமனை ஊழியரிடம் கொடுத்த பிறகே அவர்கள் மனது வைத்த பின்னே இடம் கிடைத்தது.
                                                       

   மருத்துவர்  வந்து தங்கம்மாளை நீண்ட நேரம் பரிசோதனை செய்தார். இரைப்பையில் கட்டி இருப்பது போல் தெரிகிறது  ஸ்கேன்எடுக்கவும், வேறு சில டெஸ்ட்கு எழுதித் தாரேன்.  மொதல்ல அத எடுத்திட்டு வாங்க... நர்ஸ்ட்ட எல்லாம் சொல்லி இருக்கேன்... என்னென்ன செய்யனுமோ... அவுங்க செய்வாங்க... போங்கஎன்று அனுப்பி வைத்தார்.

   நர்ஸ் அழைத்துச் சென்று பெட்டைக் காண்பித்தார்.  
பணம் ஏதும் வேணுமா வாங்கிக்கங்க சிஸ்டர்...!  எங்கம்மாவை கொஞ்சம் நல்லா பாருங்க...சிஸ்டர்... பிளிஸ்...!
தமிழினியன் கெஞ்சியதை உற்றுப் பார்த்து,   “அரசாங்கம் இந்த வேலை பார்க்கத்தான் எங்களுக்குச்  சம்பளம் கொடுக்கிது... நீ ஒன்னும் காசுதர வேணாம்... இப்படிக் காசு வாங்கினா எங்க குடும்பமெல்லாம் நல்லா இருக்காது... நீ ஒன்னும் கவலைப்படாதே...ஏன்... யாரும் பாத்துக்கப் பொம்பளைங்க இல்லையா!”  

   இல்லீங்க... சிஸ்டர்... எங்களுக்க யாருமில்ல... எனக்கு அம்மா... அம்மாவுக்கு நான்... அவ்வளவுதான்.. எங்க அம்மா கூலி வேலைக்குப் போயிதான் என்ன காலேஜ்ல்ல படிக்க வக்கிது... ரொம்பக்  கஷ்டப்படுற குடும்பம் சிஸ்டர்...” 

   அதான் சிஸ்டர்... நா ஒருத்தி இருக்கேன்ல்ல... கவலைப்படாதே...!
-அந்த நர்ஸின் ஆறுதல் வார்த்தை அவனுக்கு ஒரு தெம்பைக் கொடுத்தது. 
அனைத்து டெஸ்ட்டுக்கும் அவரே செலவு செய்யாமல் எடுக்கச் செய்தார்.  ஸ்கேன்எடுப்பதற்கு இவர்களின் ரேசன் கார்டை வாங்கி  இலவசமாக எடுக்க ஆவன செய்தார். 
                                                                          

   சாப்பிடுறதுக்குச் சாப்பாடு வாங்கி வாறேன்...” -என்று சொல்லித் தமிழினியன் புறப்பட்டான்.

   வேண்டாம்ப்பா... என்னனால சாப்பாட்ட முழுங்க முடியாது... ரொம்பக் கஷ்டமா இருக்கு...!

   சரிம்மா... சாத்துக்குடி ஜுஸ் வாங்கிட்டு வாறேன்...

சிறுது நேரத்தில் ஜுஸைக் கொண்டு வந்து கொடுக்கத்  தங்கம்மாள் அதைப் பருகினாள்.

   அன்று மருத்துவமனையில் கொடுத்த உணவைத்  தமிழினியன் சாப்பிட்டான். அதைப் பார்த்துக் கொண்டிருந்த தங்கம்மாளின் கண்ணில் நீர் வழிந்தது.  
   அப்படியே தங்கமாள்  உறங்கிப் போக,  தரையில் படுத்த தமிழினியன் உறங்கிப் போனான்.  

   தமிழினியன் விழித்த பொழுது,  சூரியன் உதித்திருந்த்து.  அம்மாவைப் பார்த்தான் நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.  தேநீர் அருந்தாலாம் என்று எண்ணி வெளியில் கடைக்குச் சென்றான். 

   ஸ்ட்ராங்க...டீ ஒன்னு...” - சொல்லிவிட்டு  இன்றைய  செய்தி என்னவென்று அறியத்  தொங்கிக்கொண்டிருந்த வால்போஸ்டரைப் பார்த்தான்.  திருச்சி தீ குடிசை தீயில் எரிந்தது!என்றிருந்தது.  தேநீரை வாங்கிக் குடித்துக் கொண்டே திருச்சியில் எந்தப் பகுதியில் தீப்பிடித்த்து என்று தெரியவில்லையேஎண்ணியவாறு ஒரு தந்தி’  கொடுங்க என்று வாங்கி டீக்கும் சேர்த்துக்  காசைக் கொடுத்தான்.  

   துவாக்குடி செய்தியைத் தேடிப் பார்த்தான்.   எரிந்து கொண்டிருக்கும் வீட்டின்  படத்துடன் செய்தி வெளியாகி இருந்தது;   படத்தைப் பார்த்தும் திடுக்கிட்டுப் போனான்.  அது அவனுடைய வீடுதான் படத்தில் வந்திருந்தது. அவனுக்குக்  கையும் ஓடவில்லை,  காலும் ஓடவில்லை.   அவனின் அம்மாவின் பெயரும் அவனின் பெயரும் இடம்பெற்று இருந்தன.  அவர்கள் என்ன ஆனார்கள் என்பதும் அவர்களின் நிலை என்ன என்பதும் தெரியவில்லை.    தீ விபத்திற்கான காரணம் ஏதேனும் முன்விரோதம் காரணமா?  அல்லது இவர்களுக்கு எதிரிகள் யாரும் இருக்கிறார்களா?  என்ற கோணத்தில் காவல்துறை  விசாரணை நடைபெறுகிறது என்று செய்தி வெளியாகி இருந்தது.   

   தமிழினியன் நினைத்துப் பார்க்கையிலே தலை சுற்ற ஆரம்பித்தது.  தண்ணீரை எடுத்து முகத்தைக் கழுவித் தன்னை  ஆசுவாசப்படுத்திக் கொண்டு மருத்துவமனைக்குள் சென்றான்.  அம்மா இப்பொழுது விழித்திருந்தாள்.

   எங்கப்பா போயி இருந்தே...?”

   டீ குடிக்கம்மா... இப்ப எப்படிம்மா இருக்கு...?”

   பரவாயில்லப்பா... லேசா வலி இருக்கு...

   எல்லாம் சரியாயிடும்... நீ ஒன்னும் கவலைப்படாதே... சரியா... நா  வீட்டுக்குப் போயி டிரஸ் எடுத்திட்டு வாரேன்...

   சரிப்பா... சீக்கிரம் வந்திடு...என்று மகனை வழியனுப்பி வைத்தாள்.

   நகரப் பேருந்துக்காக நீண்ட காத்திருப்பிக்குப் பின் அவன் பயணிக்கும் ஒரு பேருந்து வந்தது.  அதிகாலை என்பதால் பேருந்துகள் குறைவாகவே இயங்குகின்றன என்று  நினைத்துக் கொண்டான்.  பேருந்து ஆங்காங்கே நிறுத்ததில் நின்ற மெதுவாகச் சென்றது.   வீடு என்ன ஆனதோ?  தான் அன்பாக வளர்த்த ‘டாமிநாய் சங்கிலால் கட்டப்பட்டு இருந்தது.  நாய் என்ன ஆனதோ?  அப்பாவின் பிரேம் போட்ட எரிந்து போயிருக்குமா?   எண்ண ஓட்டங்கள் ஓடிக்கொண்டிருக்கையில்,   பேருந்து அவனின் நிறுத்தத்தில் நிற்க இறங்கியவுடன் வேகமாக  வீட்டை நோக்கி ஓடினான்.  மேல் மூச்சுக்  கீழ்மூச்சு வாங்க  மின்னல் வேகத்தில் வீட்டை அடைந்தான்.

   வீட்டைப் பார்த்த அவனுக்கு ஈரக்கொலையெல்லாம் நடுங்கியது.  வீடு முழுவதும் எரிந்து பொருட்கள் அனைத்தும் நாசமாகிப் போயிருந்தது.  அவனைப் பார்த்ததும் தெருமுழுக்கக் கூடிவிட்டது.  

   எங்கே தமிழ் போயிருந்தா... நைட்டு  பன்னென்டு மணியிருக்கும் வீடு தீப் பிடிச்சு  எரிஞ்சப்ப... பாதி எரியும் போதுதான் அக்கம் பக்கத்தில பாத்து பயர் சர்வீஸ்க்கு போன் பண்ணி இருக்காங்க... வண்டி வர்றதுக்குள்ள எல்லாம் முடிஞ்சு போயிடுச்சு...  வெளியில வேற கதவு சாத்தியிருந்திச்சா...   நாங்க  பயந்தே போய்ட்டோம்... உங்கள உள்ள வச்சு யாரும் கொளுத்திட்டாங்களோன்னு... நல்ல வேளை நீங்க யாரும் உள்ள இல்ல...ஆமா எங்க போனீங்க...? ”  பால்ய நண்பன் தினேஷ்பால் அக்கறையுடன் பேசினான்.

   இல்லடா... அம்மாவுக்குத்  திடீர்னு உடம்பு சரியில்ல... ஜி.எச்.சுக்கு கூட்டிட்டு போயி அட்மிட் பண்ணினேன்.

   நல்ல வேளை... நீங்க பொழைச்சீங்க... எந்தச் சாமி புண்ணியமோ...?”
                                                                                      

எரிந்த குடிசைக்குள் நுழைந்து பார்த்தான்.  மரபீரோ என்பதால் அதுவும் எரிந்து போய் அதில் இருந்த சான்றிதழ்கள் துணிகள் அனைத்தும்  எரிந்து போயிருந்தன.   ‘டாமிகரிக்கட்டையாகி தரையில் கிடந்த்தைப் பார்த்ததும் அழுதே விட்டான்.  வீடு எரிந்ததற்ககான காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்துப்பான்.  உடனடியாகத் தமிழினியனின் மூளை வேலை செய்யவில்லை; சிறிது நேரத்திந்குப் பிறகு மீண்டும் மருத்துவமனையை நோக்கிப் புறப்பட்டான்.


   ங்கம்மா  மகனின் வரவுக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தாள். தமிழினியன் வந்தவுடன்,  “ஏம்ப்பா... துணி ஒன்னும் எடுத்திட்டு வரலை...? தமிழ்... டாக்டர் வந்தாரு... ஒன்னக் கேட்டாரு...  நீ வந்தவுடனே வரச்சொன்னாரு..

   சரிம்மா...டாக்டரைப் பார்த்துட்டு வர்றேன்...டாக்டரின் அறைக்குச் சென்றான்.

   வணக்கம்... டாக்டர்...”  தமிழினியன் இருகரம் எடுத்துக் கும்பிட்டான்.

   வாங்க... எங்கே வெளியே போயிருந்தீங்களா...?” ‘ஆமாஎன்பதைப்போலத் தலையாட்டினான்.

   உட்காருங்க...ஒங்க அம்மாவோட எக்ஸ்-ரே, ரிப்போர்ட் எல்லாம் வந்திடுச்சு... அதான் ஒங்கள வரச் சொன்னேன்...”  ‘என்ன ரிசல்ட்?’ என்று அவன் கண்கள் கேட்டன.

   ரிசல்ட் எல்லாத்தையும் பார்க்கும் போது... ஒங்க அம்மாவுக்கு உணவுக்குழாயில கேன்சர் இருக்குமான்னு சந்தேகம் இருக்கு.  மைனர் ஆப்ரேசன் செய்து கட்டிய கொஞ்சம் சாம்பிள் எடுத்து ‘பயாப்ஸிடெஸ்ட்க்கு அனுப்பனும்.   தமிழினியன் இதைக் கேட்ட மாத்திரத்தில மயங்கிச் சரிந்தான்.  டாக்டர் அவனின் முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிய வைத்தார்.

   “பயப்படாதிங்க... கேன்சரா இருக்கமான்னு டவுட்டுதான்.... ‘பயாப்ஸி டெஸ்ட் எடுக்கனுமுன்னு  ஒங்க அம்மாட்ட சொல்லுங்க... நாளைக்கு ஆப்ரேசன் ... அதைச்சொல்லத்தான் வரச்சொன்னேன்...
டாக்டரின் அறையிலிருந்து தமிழினியன் சிலைபோல வெளியே வந்தான்.

                                                                            -வ(ள)ரும்...



படிக்க  ‘கிளிக்’ செய்க

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (1)


நீங்க நினைக்காத நெஞ்சம்...! (4)


-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.











ஞாயிறு, 8 நவம்பர், 2015

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (4)

நீங்க நினைக்காத நெஞ்சம்...!  (4)


   காரின் கதவை அப்பா ரெங்கராஜ் வேகமாகத் திறக்க  சசிரேகா அமர்ந்ததும் கார் ‘விர்’ரெனச் சீறிப் பாய்ந்தது.  காருக்குள் யாரும் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்ளவேயில்லை.  அப்பா கோபமாக இருக்கிறார் என்றால் பேசமாட்டார் என்பது சசிரேகாவுக்குத் தெரிந்ததுதான்.   பதினைந்து நிமிடத்திற்குள் வீட்டின் கார்பார்க்கில்   இடிக்கும்படி போய்க் குலுங்கிக் கார் நின்றது.

   வீட்டிற்குள் நுழைந்ததும் சட்டையைக்  கழட்டிக் கொக்கியில் மாட்டிக் கொண்டேஅப்பா ரெங்கராஜ்  கேட்டார்,  “யார் அவன்...?”

   “.....................................................................................“  சசிரேகா ஒன்றும் சொல்லாமல் இருந்தாள்.


ஞாயிறு, 1 நவம்பர், 2015

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (3)

படிக்க  ‘கிளிக்’ செய்க
நீங்க நினைக்காத நெஞ்சம்...!(1)


நீங்க நினைக்காத நெஞ்சம்...! (2)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (3)


   ரோஸியைப் பற்றித் தற்பொழுது தான்  அறிந்ததைத் தமிழினியன் சசிரேகாவிடம் சொல்லியதைக் கேட்டு  ரோஸியின் மீது இரக்கப்படுவதைச் சசியின்  முகம் காட்டிக் கொடுத்தது.    

   இருவரும் பேசியபடியே சாலையோரமாக நடந்தார்கள்.  இருமருங்கும் நெருக்கமாக வளர்ந்திருந்த பூ மரங்கள் அவர்களுக்குச் சாமரங்கள் வீசி வரவேற்பதைப் போலத்  தரையில் விழுந்து வணங்கிக் கிடந்தன.

Related Posts Plugin for WordPress, Blogger...